All posts by Tamil Valarchi Thurai

திருவள்ளூர் மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளையொட்டி நடைப்பெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசு தொகைக்கான காசோலை, சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
கரூர் மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் காசோலையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றன.
சிவகங்கை மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்தநாள் பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சியரால் பொன்னாடை அணிவித்தும் நூல் பரிசும் வழங்கிச் சிறப்பிக்கப் பெற்றனர்.
விருதுநகர் மாவட்டம் – அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுதொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பெற்றன.
தேனி மாவட்டம் – முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு ஆட்சிமொழிக் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கிவைத்து, சிறந்த வரைவுகள் குறிப்புகள் எழுதியமைக்கு தெரிவுசெய்யப்பட்டவர்களுக்கு காசோலைப் பரிசுகள் மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்கள்.