செய்திகள்

தகைமையாளர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் திருவுருவ பேரறிவுச் சிலையின் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்ளரங்கில் 30.12.24 ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்குறள் தகைமையாளர்களுக்கு காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி மகிழ்ந்தார். அருகில் மாண்புமிகு துணை முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்  

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அனைத்துப் படைப்புகள் நாட்டுடைமை

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அனைத்துப் படைப்புகளையும் அறிவுப் பொதுவுடைமை செய்யும் வகையில் நாட்டுடைமையாக்கி அவரின் மரபுரிமையரான திருமதி.க.ராஜாத்தி அம்மாள் அவர்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கியதற்கான அரசாணையினை அவர்களின் இல்லத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்களால் வழங்கப்பட்டது.