உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளர்களுக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல். தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞர்களிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் பயன்கொளும் நிலையில் தமிழாய்வினை வளர்த்தல் என்பன உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அடிப்படை இலக்காக, தலையாய நோக்கமாக அமைகின்றன. தமிழைத் தாய்மொழியாகக் கொள்ளாத பிற இந்திய மொழியினருக்கும் பிற நாட்டினருக்கும் கற்பித்தல் என்பது பிறிதொரு நோக்கமாகும். இவற்றை எல்லாம் பல்வேறு திட்டங்களின் வழியே உலகத் தமிழ்ச்சங்கம் செயல்படுத்து வருகிறது.
உலகத் தமிழ்ச் சங்கம்
தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளர்களுக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல். தமிழின் பெருமையை அயலவருக்குச் சிறப்பாக எடுத்துரைத்தல், உலகத் தமிழறிஞர்களிடையே தொடர்பு கொண்டு தமிழறிஞர்களும், நிறுவனமும் என்பது பிறிதொரு நோக்கமாகும். இவற்றை எல்லாம் பல்வேறு திட்டங்களின் வழியே உலகத் தமிழ்ச்சங்கம் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்ப் பல்கலைக்கழகம்
தமிழ்க் கல்வியில் உயராய்வினை வளப்படுத்துதல், தமிழாய்வாளருக்குத் தேவையான ஆவணங்களை உருவாக்குதல், தமிழ், தமிழர், இலக்கியம், வரலாறு, மருத்துவம், கல்வி, கலை, சமுதாயம், பண்பாடு, அறிவியல் எனத் துறைதோறும் தமிழாய்வை மேம்படுத்துதல்.
![senthamizh sorpirappiyal](https://tamilvalarchithurai.tn.gov.in/wp-content/uploads/2018/02/senthamizh-sorpirappiyal.jpg)
முனைவர் கோ.விசயராகவன், இயக்குநர் நேரடி:94441 09166 / அலுவலகம்:044-2254 1209
செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலித் திட்ட இயக்ககம்
ஒரு மொழியிலுள்ள சொற்களையெல்லாம் திருந்திய வடிவில் தொகுத்து, அவற்றின் முதலெழுத்துகள் நெடுங்கணக்கு அல்லது குறுங்கணக்கு முறையில் அமைய அச்சொற்களை
வரிசைப்படுத்தி, ஒவ்வொரு சொல்லுக்கும் அடிப்படைப் பொருளையும் வழிநிலைப் பொருள்களையும் ஏரணத்திற்குப் பொருந்த வரலாற்று முறையில் குறித்து, இலக்கியமிருப்பின் இருவகை வழக்கினின்றும், அஃதின்றேல் உலகவழக்கினின்றும், அப்பொருள்கட்குச் சான்றாக மேற்கோள்கள் எடுத்துக்காட்டி, இறுதியில் அவ்வச்சொல்லின் வேரொடு கூடிய வரலாற்றை வரைந்து இனச்சொற்களையும் காட்டுவது, முழுநிறைவான சொற்பிறப்பியல் பேரகரமுதலியாகும்.
தமிழ் இணையக் கல்விக்கழகம்
உலகில் நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிவாழும் தமிழர்கள் தங்களுடைய மரபுகளையும் விழுமியங்களையும் பண்பாட்டையும் பாதுகாக்க வேண்டும். இத்தேவையை நிறைவேற்ற அவர்கள் தங்கள் மொழி, கலை, இலக்கியம் இவற்றோடு நீங்காத தொடர்புடன் வாழவேண்டும். உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் பண்பாட்டுத் தேவைகளை மனத்திற்கொண்டு தமிழக முதல்வர் அவர்கள் 1999இல் நடைபெற்ற தமிழ் இணைய மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழ் இணையப் பல்கலைக்கழகம் (த.இ.ப.) ஒன்று அமைக்கப்படும் என அறிவித்தார். அதை நிறைவேற்றும் வகையில் இத்தமிழ் இணையப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டிருக்கிறது. த.இ.க.ஆட்சிக்குழு ஒன்றால் வழி நடத்தப்பெற்று, ஒரு முழுநேர இயக்குநர் பொறுப்பில் செயல்பட்டு வருகின்றது. இது தற்போது தமிழ் இணையக் கல்விக்கழகம் என்று பெயர் மாற்றம் செய்யப்பெற்றுள்ளது.
பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம்
‘பழந்தமிழரின் சிறப்புகளையெல்லாம் நாட்டுக்கு எடுத்துக்காட்டும் வகையில் சுடுமண் சிற்பம், சுதை சிற்பம் மற்றும் மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டும், படிமங்களாக வடிவமைத்த கலைப்பொருட்களைக் கொண்டும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அமைக்கப்படும்’ என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் அறிவித்தார்கள். அதன்படி, பணிகள் நிறைவுற்று பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் 01.03.2016 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது.