செய்திகள்

அண்ணல் காந்தியடிகளின் கருத்துக்களையும் சமூகச் சிந்தனைகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித் துறை நடத்தும் பேச்சுப்போட்டி – அழைப்பு

அண்ணல்  காந்தியடிகளின்  கருத்துக்களையும்,  சமூகச்  சிந்தனைகளையும் தமிழ்நாடு  முழுவதும்    உள்ள பள்ளி  /  கல்லூரி  மாணவ,  மாணவியரிடம்  கொண்டு  சேர்க்கும்  வண்ணம்.  பேச்சுப் போட்டிகள்  12.10.2022   (புதன்  கிழமை) நேரம்   மு.ப 10.00 மணி  தனித்தனியே  நடைபெறவுள்ளன.   சென்னையில்  இந்தப்  போட்டிகள்   வட சென்னை,  மத்திய  சென்னை,  தென் சென்னை,  ஆகிய  மூன்று  இடங்களில்  பிரிக்கப்பட்டு பேச்சுப்போட்டிகள்  நடத்தப்படும்.   ஒரே நாளில் சென்னை  உட்பட  38     மாவட்டங்களிலும்  இப்போட்டிகள்   நடைபெறும்.

பள்ளி   மாணவர்களுக்கு  வட சென்னை, அரசு  உயர்நிலைப் பள்ளி, வில்லிவாக்கம்,  சென்னை – 600 049,   தென்  சென்னை அரசு மகளிர் மேல்நிப்பள்ளி,  அசோக்நகர்,  சென்னை –  600 005,  மத்திய சென்னை, செயகோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி,  சைதாப்பேட்டை, சென்னை-600 015  ஆகிய  இடங்களில்  பேச்சுப்போட்டிகள்  நடைபெறும்.

கல்லூரி   மாணவர்களுக்கு  வட சென்னை, டாக்டர் அம்பேத்கர் கலைக் கல்லூரி  வியாசர்பாடி,  சென்னை – 600 039, தென்  சென்னை, இராணிமேரி கல்லூரி,  சென்னை – 600 005,  மத்திய சென்னை,   பாரதி மகளிர் கலைக் கல்லூரி  பிராட்வே,  சென்னை- 600 001 ஆகிய  இடங்களில்  பேச்சுப்போட்டிகள்  நடைபெறும்.

பள்ளி மாணவர்களுக்கான தலைப்புகள் 1) அண்ணலின் அடிச்சுவட்டில்,  2) காந்தி கண்ட இந்தியா, 3) வேற்றுமையில் ஒற்றுமை, 4) பாரத தேசமென்று பெயர் சொல்லுவோம் ஆகியனவும் கல்லூரி  மாணவர்களுக்கான தலைப்புகள்  1) வாழ்விக்க வந்த எம்மான், 2)  மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்,3)சத்தியசோதனை, 4)  எம்மதமும் நம்மதம், 5. காந்தி  அடிகளின் வாழ்க்கையிலே, 6. இமயம் முதல் குமரி வரை  முதலியன  ஆகும்.

பேச்சுப் போட்டியில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு    முதல் பரிசு   ரூ.5000/-,இரண்டாம் பரிசு ரூ.3000/-,   மூன்றாம் பரிசு ரூ. 2000/-  என்ற வகையிலும் சிறப்புப் பரிசாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் ரூ. 2000/- வீதம் இரண்டு பேருக்கு வழங்கப்பெறும்.  பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு  முதல் பரிசு ரூ.5000/-,இரண்டாம் பரிசு ரூ.3000/-, மூன்றாம் பரிசு ரூ.2000/-  என வழங்கப்பெறும்.