
இன்று (10.09.2024) தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில் தமிழ் வளர்ச்சி, எழுதுப்பொருள் மற்றும் அச்சுத் துறையின் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் பணி முன்னேற்றம் குறித்து அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., எழுதுப்பொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையர் திருமதி வெ.ஷோபனா, இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந.அருள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.