தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கப் புத்தாக்கப் பணி
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கப் புத்தாக்கப் பணிகளை மேற்கொள்ள 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சண்டிகர் தமிழ் மன்றத்தின் கட்டட விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலை – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.2.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கப் புத்தாக்கப் பணிகளை மேற்கொள்ள 50 […]
‘வடைப்பூ’ நூல் வெளியீட்டு விழா
18.02.2025 அன்று விருதுநகர் மாவட்டம், சாத்தூர் எஸ்.ஆர்.என்.எம். கல்லூரியில் நடைபெற்ற விழாவில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை (பயிற்சி) ஆணையர் மரு. இரா.ஆனந்தகுமார், இ.ஆ.ப., அவர்கள் எழுதிய ‘வடைப்பூ’ என்ற நூலினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்ட நிகழ்வு.
சிறந்த நூலாசிரியர் மற்றும் பதிப்பக விருது வழங்கும் விழா-2023
07.02.2025 அன்று சென்னையில் 2023ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாசிரியர்களுக்கும் பதிப்பகத்தாருக்கும் பரிசு வழங்கப்பட்ட விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் எமது பதிப்பக நூலாசிரியர் திருப்பதிசாமி அவர்களுக்கும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் பொதுமேலாளர் சண்முகநாதன் அவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். இதில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள், செயலாளர் வெ.ராஜாராமன் இ.ஆ.ப. ஆகியோர் கலந்துகொண்டனர்.
2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் பரிசு வழங்கும் விழா
இன்று (07.02.2025) சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் 2023- ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாசிரியர்கள், பதிப்பகத்தாரர்களுக்கு பரிசு காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ந.அருள் […]
ஆய்வும் -செயலாக்கமும்
தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஆட்சி மொழித் திட்ட செயலாக்க ஆய்வு மேற்கொண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையினை 7.2.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் மருத்துவர் சு. பிரபாகர் இ.ஆ.ப. அவர்களிடம் வழங்கியதோடு அவரது முன்னிலையில் வாரியத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம் குறித்து உரையாற்றினேன்.