சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணைகள்
கனவு இல்லத் திட்டத்தின் நீட்சியாக தமிழில் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பாளர் விருது பெற்ற 10 மொழிபெயர்ப்பாளர்களுக்கு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கி, அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மக்கள் பதிப்பாக முதல் 10 தொகுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.1.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் […]
அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்கள் (தமிழ்) – மக்கள் பதிப்பு வெளியீடு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (13.1.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அண்ணல் அம்பேத்கரின் ஆக்கங்களை எளிய தமிழில் மொழிபெயர்த்து மக்கள் பதிப்பாக முதல் 10 தொகுதிகளை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு வே.ராஜாராமன். இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை […]
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் ஹூஸ்டன் தமிழாய்வுகள் இருக்கை சிறப்பாக செயற்பட வாழ்த்து
அமெரிக்காவின் நான்காவது பெருநகரமான ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக தமிழ் இருக்கை நிறுவிட தமிழ்நாடு அரசு இதுவரை 3,44,41,750/- (ரூபாய் மூன்று கோடியே நாற்பத்து நான்கு இலட்சத்து நாற்பத்து ஓராயிரத்து எழுநூற்று ஐம்பது மட்டும்) வழங்கியுள்ளது. மேலும் தமிழ்நாடு அரசு மாபெரும் கொடையாளராக மிளிரும் என்பதைக் கருத்திற்கொண்டு இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.1,50,00,000/- (ரூபாய் ஒரு கோடியே ஐம்பது இலட்சம்) வழங்கப்பட்டதோடு, மாண்புமிகு […]
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் 53- ஆவது ஆளுகைக் குழுக் கூட்டம்
ஆளுகைக்குழுக்கூட்டம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் 53- ஆவது ஆளுகைக் குழுக் கூட்டம் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவருமான திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் தலைமையில் 07.01.2025 செவ்வாய்க்கிழமையன்று சென்னை, தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசு செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் ந. அருள் மற்றும் […]
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு . மு.பெ.சாமிநாதன் அவர்கள் துறையின் சார்பாக பல்வேறு விருதுகளை வழங்கினார்
இன்று (07.01.2025) சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு. பெ. சாமிநாதன் அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ்த்தாய் விருது – தென்காசித் திருவள்ளுவர் கழகம், கபிலர் விருது – கவிஞர் முத்தரசன், உ.வே.சா விருது – முனைவர் ஆ. இராமநாதன், கம்பர் விருது – முனைவர் ம.பெ. சீனிவாசன், சொல்லின் செல்வர் […]
தகைமையாளர் பரிசு
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கன்னியாகுமரியில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் திருவுருவ பேரறிவுச் சிலையின் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள உள்ளரங்கில் 30.12.24 ஞாயிற்றுக்கிழமை மாலை திருக்குறள் தகைமையாளர்களுக்கு காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி மகிழ்ந்தார். அருகில் மாண்புமிகு துணை முதலமைச்சர் மற்றும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்