செம்மொழி நாள் விழா - 2025
11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மற்றும்
கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டி
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான சூன் 3 அன்று செம்மொழி நாள் விழாவாக 2025ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது.
“தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர் பிறந்த நாளான சூன் திங்கள் 3ஆம் நாள் தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் செம்மொழிநாள் விழாவாகக் கொண்டாடப்படும்”.
செம்மொழியின் சிறப்பையும் முத்தமிழறிஞரின் தமிழ்த்தொண்டின் பெருமையையும் மாணவர்களிடம் உணர்த்திடும் வகையில் ஆண்டுதோறும் அனைத்து மாவட்டங்களிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தி 03.06.2025ஆம் நாளன்று நடைபெறவுள்ள செம்மொழி நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர். மாவட்ட மற்றும் மாநில அளவில் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டி தொடர்பான விவரம் பின்வருமாறு:
11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கான மாவட்டப் போட்டி விவரம்
- அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 09.05.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.
- இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து அல்லது அவர்கள் பயிலும் பள்ளியின் மாவட்டங்களில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள் / உதவி இயக்குநர்கள் அலுவலகங்களில் நேரடியாக பெற்று தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் 25.03.2025ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / உதவி இயக்குநர் அலுவலகங்களில் நேரில் அளிக்க வேண்டும்.
- இப்போட்டிகளில் அரசுப்பள்ளி, தனியார் பள்ளி, பதின்ம பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி, மத்திய இடைநிலை கல்வி வாரியம் (CBSE) பயிலும் மாணவர்கள் பங்குபெறலாம்.
- போட்டி நடைபெறும் இடம், நாள் குறித்த தகவல்கள் மாவட்ட துணை இயக்குநர்கள் / உதவி இயக்குநர்கள் வழியாக முதன்மைக் கல்வி அலுவலகம் / பள்ளித் தலைமையாசியர் வழியாகவும் நாளிதழ் வாயிலாகத் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
- “செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்த்தொண்டின் பெருமை” சார்ந்த தலைப்பு அளிக்கப்படும். இப்பொருண்மை சார்ந்த தலைப்புகளுக்கு மாணவர்கள் ஆயத்தப்படுத்திக் கொள்ளலாம்.
- மாவட்டப் போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர் 17.05.2025 அன்று சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெறுவர்.
கல்லூரி மாணவர்களுக்கான மாவட்டப் போட்டி விவரம்
- அனைத்து மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 10.05.2025 சனிக்கிழமை அன்று நடைபெறும்.
- இப்போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து அல்லது அவர்கள் பயிலும் கல்லூரியின் மாவட்டங்களில் அமைந்துள்ள தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர்கள் / உதவி இயக்குநர்கள் அலுவலகங்களில் நேரடியாக பெற்று தலைமையாசிரியரின் பரிந்துரையுடன் 25.03.2025ஆம் நாளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
- விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / உதவி இயக்குநர் அலுவலகங்களில் நேரில் அளிக்க வேண்டும்.
- இப்போட்டிகளில் கலை மற்றும் அறிவியல், கல்வியியல், பொறியியல், பல்தொழில்நட்பம், மருத்துவம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் பங்குபெறலாம்.
- போட்டி நடைபெறும் இடம், நாள் குறித்த தகவல்கள் மாவட்ட துணை இயக்குநர்கள் / உதவி இயக்குநர்கள் வழியாக கல்லூரிக் கல்வித் துறை / கல்லூரி முதல்வர் வழியாகவும் நாளிதழ் வாயிலாகவும் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
- போட்டி நடைபெறும் இடம், நாள் குறித்த தகவல்கள் மாவட்ட துணை இயக்குநர்கள் / உதவி இயக்குநர்கள் வழியாக முதன்மைக் கல்வி அலுவலகம் / பள்ளித் தலைமையாசியர் வழியாகவும் நாளிதழ் வாயிலாகத் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
- “செம்மொழியின் சிறப்பு மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்த்தொண்டின் பெருமை” சார்ந்த தலைப்பு அளிக்கப்படும். இப்பொருண்மை சார்ந்த தலைப்புகளுக்கு மாணவர்கள் ஆயத்தப்படுத்திக் கொள்ளலாம்.
- மாவட்டப் போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவர் 17.05.2025 அன்று சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெறுவர்.
மாவட்டப் போட்டி பரிசுத் தொகை விவரம் (பள்ளி / கல்லூரி)
பரிசு | கட்டுரைப் போட்டி | பேச்சுப் போட்டி |
---|---|---|
முதல் பரிசு | 10,000/- | 10,000/- |
இரண்டாம் பரிசு | 7,000/- | 7,000/- |
மூன்றாம் பரிசு | 5,000/- | 5,000/- |
மாவட்டப் போட்டிகளில் முதல் பரிசு பெறும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் 17.05.2025 அன்று சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெறுவர்.
- தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நடைபெற்ற கட்டுரை / பேச்சுப் போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் 17.05.2025 அன்று சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று பரிசு பெறும் பள்ளி / கல்லூரி மாணவர்களுக்கு 03.06.2025 அன்று நடைபெறும்.
- செம்மொழிநாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர்.
- 03.06.2025 அன்று நடைபெறும் செம்மொழிநாள் விழா தொடர்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் மாவட்ட / மாநில அளவில் பரிசுத் தொகை ரூ.17,36,000/- (ரூபாய் பதினேழு இலட்சத்து முப்பத்தாறாயிரம் மட்டும்) தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர்.
மாநிலப் போட்டி பரிசுத் தொகை விவரம் (பள்ளி / கல்லூரி)
பரிசு | கட்டுரைப் போட்டி | பேச்சுப் போட்டி |
---|---|---|
முதல் பரிசு | 15,000/- | 15,000/- |
இரண்டாம் பரிசு | 10,000/- | 10,000/- |
மூன்றாம் பரிசு | 7,000/- | 7,000/- |
- கட்டுரை / பேச்சுப் போட்டிக்கான போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் அந்தந்த கல்லூரிக்குரிய மாவட்டங்களில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.
- கலந்து கொள்ளும் மாணவர்கள் போட்டி நாளன்று முற்பகல் 09.00 மணிக்குள் தங்கள் வருகையைப் பதிவு செய்திடல் வேண்டும்.
- போட்டியில் பேசுவதற்கு ஒருவருக்கு 3 நிமிடங்கள் மட்டுமே அளிக்கப்படும்.
- வெற்றி பெற்றவர்களைத் தெரிவு செய்தல் நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.
- தலைப்புகள் முத்தமிழறிஞர் கலைஞரின் தமிழ்த் தொண்டு, செம்மொழியின் சிறப்பு இப்பொருண்மை சார்ந்தே போட்டியின் போது அறிவிக்கப்படும்.
- இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் பங்கேற்புப் படிவத்தை நிறைவு செய்து கல்லூரி முதல்வர் / பள்ளி தலைமையாசிரியர் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் / உதவி இயக்குநர்களிடம் அளிக்கப்பட வேண்டும். பங்கேற்புப் படிவம் இல்லாத மாணவர்கள் போட்டியில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- 09.30 மணிக்கு மேல் மேல் வருகை தரும் மாணவர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- மாவட்டப் போட்டியில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000/-, இரண்டாம் பரிசாக ரூ.7000/-, மூன்றாம் பரிசாக ரூ.5000/- வழங்கப்பெறும்.
- போட்டி உரிய நாளில் நடத்தப் பெற்று முடிவுகள் அன்றே அறிவிக்கப்படும்.
- போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்குப் பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.
- போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு தேநீர், மாச்சில், மதிய உணவு, பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பெறும்.
- மாவட்டப் போட்டியில் முதல் பரிசு பெறும் மாணவர்கள் 17.05.2025 அன்று சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெறுவர்.
- மாவட்டப் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெறும் மாணவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் இப்போட்டியில் கலந்து கொள்ள இயலாது.
- ஒரு போட்டிக்கு ஒரு மாணவர் வீதம் 2 போட்டிகளுக்கு 2 மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.
முனைவர். ந. அருள்
இயக்குநர்
தமிழ் வளர்ச்சித் துறை