செய்திகள்

தமிழ் வளர்ச்சித் துறையில் மகளிரின் பெரும் பங்கு!

தமிழ் வளர்ச்சித் துறையில் மகளிரின் பெரும் பங்கு! மங்கையராகப் பிறப்பெடுத்துள்ள அனைத்து பெண்களுக்கும் மகளிர் நாள் வாழ்த்துகளையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம். எட்டுமறிவினில் ஆணுக்கிங்கே பெண், இளைப்பில்லை காணென்று கும்மியடி” என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையில் பெண்களே அதிக எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர். மேலும் இத்துறையின் திட்டங்களை செயற்படுத்திட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்ட மகளிர் அனைவரும் அல்லும் பகலும் அயராது உழைத்து அனைத்து நிலைகளிலும் துறையை உயர்த்தி […]

சர். ஜான் ஹுபர்ட் மார்ஷல் திருவுருவச் சிலை அமைக்கும் பணிக்கான ஆய்வு

இன்று (17.03.2025) சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் விரைவில் திறக்கப்படவுள்ள சர். ஜான் ஹுபர்ட் மார்ஷல் அவர்களது திருவுருவச் சிலை அமைக்கும் பணியை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்வின் போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு. வே. ராஜாராமன், இ.ஆ.ப., அரசு அருங்காட்சியகங்கள் துறை ஆணையர் திருமதி கவிதா ராமு, […]

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கப் புத்தாக்கப் பணி

தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கப் புத்தாக்கப் பணிகளை மேற்கொள்ள 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சண்டிகர் தமிழ் மன்றத்தின் கட்டட விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலை – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (18.2.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் கலையரங்கப் புத்தாக்கப் பணிகளை மேற்கொள்ள 50 […]

2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் பரிசு வழங்கும் விழா

இன்று (07.02.2025) சென்னை, இராஜா அண்ணாமலைபுரம், தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் 2023- ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலாசிரியர்கள், பதிப்பகத்தாரர்களுக்கு பரிசு காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் திரு.வே.ராஜாராமன், இ.ஆ.ப., தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் ந.அருள் […]

ஆய்வும் -செயலாக்கமும்

தமிழ்நாடு நகர்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஆட்சி மொழித் திட்ட செயலாக்க ஆய்வு மேற்கொண்டு தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கையினை 7.2.2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் மருத்துவர் சு‌. பிரபாகர் இ.ஆ.ப. அவர்களிடம் வழங்கியதோடு அவரது முன்னிலையில் வாரியத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஆட்சி மொழித் திட்டச் செயலாக்கம் குறித்து உரையாற்றினேன்.